• May 04 2024

காவல்துறையினரால் மீட்கப்பட்ட வாள்வெட்டுக் குழுவின் உடைகள் - தொடரும் விசாரணை! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 3:24 pm
image

Advertisement

நாவற்குழி - கோவிலாக்கண்டி காட்டுப் பகுதியில் இருந்து சாவகச்சேரி காவல்துறையினரால் மீட்கப்பட்ட மகிழுந்திலிருந்து வாள்வெட்டுக் குழுவினர் அணிந்து வந்த உடைகள் மீட்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் நாவற்குழி பகுதியில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகிழுந்து ஒன்றிற்கு கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் நிரப் மறுத்ததன் விளைவாக அன்றிரவே நிலைய ஊழியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.


இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுந்தை பூட்டப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து மீட்டிருந்தனர்.


இதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவை பெற்று மகிழுந்தை உடைத்து சோதனை செய்த போது வாள்வெட்டுக் குழுவினர் அணிந்து வந்த இரண்டு ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த மகிழுந்து மிகிந்தலை பகுதியைச் சேர்ந்தவருடையது எனத் தெரிய வருகின்றது. 

காவல்துறையினரால் மீட்கப்பட்ட வாள்வெட்டுக் குழுவின் உடைகள் - தொடரும் விசாரணை SamugamMedia நாவற்குழி - கோவிலாக்கண்டி காட்டுப் பகுதியில் இருந்து சாவகச்சேரி காவல்துறையினரால் மீட்கப்பட்ட மகிழுந்திலிருந்து வாள்வெட்டுக் குழுவினர் அணிந்து வந்த உடைகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த வாரம் நாவற்குழி பகுதியில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகிழுந்து ஒன்றிற்கு கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் நிரப் மறுத்ததன் விளைவாக அன்றிரவே நிலைய ஊழியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுந்தை பூட்டப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து மீட்டிருந்தனர்.இதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவை பெற்று மகிழுந்தை உடைத்து சோதனை செய்த போது வாள்வெட்டுக் குழுவினர் அணிந்து வந்த இரண்டு ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த மகிழுந்து மிகிந்தலை பகுதியைச் சேர்ந்தவருடையது எனத் தெரிய வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement