ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போஷாக்கு குறைபாடு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதாக மருத்துவர் சமல் சஞ்சீவ பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் சமல் சஞ்சீவவின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் மீதான குழு தீர்மானித்துள்ளது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சமல் சஞ்சீவவின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போஷாக்கு குறைபாடு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதாக அவர் மீது குற்றம்சுமத்தி சுகாதார அமைச்சு அவரது சேவையை இடைநிறுத்தியிருந்தது.
எவ்வாறாயினும், அவரது பணியிடைநிறுத்தம் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் மீதான குழு முடிவு செய்துள்ளது.