புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் சற்றுமுன் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது(09.30) முதல் - மு.ப. 10.30வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளதுடன் முற்பகல் 10.30 முதல் மாலை 5.00 வரை புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதுடன் மாலை 5.00 முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.