பொலிஸாரைக் கண்டதும் ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இரத்தினபுரி கொடிகமுவ பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளனர்.ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.