• May 08 2024

காதலனுக்கு டிமிக்கி கொடுத்து காதலனின் தந்தையுடன் ஓட்டமெடுத்த காதலி....!samugammedia

Sharmi / Apr 28th 2023, 10:41 am
image

Advertisement

இளம்பெண் ஒருவர் தனது காதலனின் தந்தையுடன் ஊரை விட்டு ஓடிய நிலையில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் உத்தரப் பிரதேசம், கான்பூரில் இடம்பெற்றுள்ளது.

அமித் என்ற இளைஞன் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலனின் வீட்டிற்கு காதலி வந்து செல்வது வழக்கம்.அதேவேளை  அமித்தின் தந்தை கமலேஷுக்கும், அந்தப் பெண்ணுக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டுஇ அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில்  தனது குடும்பத்தினரிற்கு தெரியாமல் காதலனின் தந்தையுடன் அந்த யுவதி ஓட்டம் பிடித்தார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்பூரிலிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மகளை காணவில்லையென்றதும், அமித் அவரை கடத்தியிருக்லாமென நினைத்த பெண்ணின் பெற்றோர், சக்கேரி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடமாக பொலிசார் தீவிர தேடுதல் நடத்தி, டெல்லியில் ஒன்றாக வாழ்ந்து வந்த கமலேஷையும், 20 வயது காதலியையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

கமலேஷை பிரிய மாட்டேன், இருவரும் விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம் என அந்தப் பெண் அடம்பிடித்தார்.

கமலேஷ் பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காதலனுக்கு டிமிக்கி கொடுத்து காதலனின் தந்தையுடன் ஓட்டமெடுத்த காதலி.samugammedia இளம்பெண் ஒருவர் தனது காதலனின் தந்தையுடன் ஊரை விட்டு ஓடிய நிலையில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் உத்தரப் பிரதேசம், கான்பூரில் இடம்பெற்றுள்ளது.அமித் என்ற இளைஞன் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலனின் வீட்டிற்கு காதலி வந்து செல்வது வழக்கம்.அதேவேளை  அமித்தின் தந்தை கமலேஷுக்கும், அந்தப் பெண்ணுக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டுஇ அது காதலாக மாறியுள்ளது.இந்நிலையில்  தனது குடும்பத்தினரிற்கு தெரியாமல் காதலனின் தந்தையுடன் அந்த யுவதி ஓட்டம் பிடித்தார்.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்பூரிலிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.மகளை காணவில்லையென்றதும், அமித் அவரை கடத்தியிருக்லாமென நினைத்த பெண்ணின் பெற்றோர், சக்கேரி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர்.இந்த நிலையில், கடந்த ஒருவருடமாக பொலிசார் தீவிர தேடுதல் நடத்தி, டெல்லியில் ஒன்றாக வாழ்ந்து வந்த கமலேஷையும், 20 வயது காதலியையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.கமலேஷை பிரிய மாட்டேன், இருவரும் விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம் என அந்தப் பெண் அடம்பிடித்தார்.கமலேஷ் பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement