ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட இரண்டு இலங்கைப் பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக இலங்கையர்கள் என கருதப்பட்ட இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
50 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத்தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கைது செய்யப்பட இரண்டு இலங்கைப் பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது samugammedia ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட இரண்டு இலங்கைப் பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்னதாக இலங்கையர்கள் என கருதப்பட்ட இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.50 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத்தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.