அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசாங்கம் நிறுவப்படுமானால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையுமென பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை 2022 ஏப்ரல் 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது அணியே முதலில் முன்வைத்தது. எனினும்இ அந்த யோசனையை அவர் ஏற்கவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைக்கப்பட வேண்டுமானால் அதற்கு முன்னர் பொதுவானதொரு வேலைத்திட்டம் அவசியம். அந்த வேலைத்திட்டத்தை அடிப்படையாக வைத்தே ஆதரிப்பதா அல்லது இல்லையா என்ற முடிவுக்கு எதிரணிகளால் வரக்கூடியதாக இருக்கும்.
மாறாக அமைச்சு பதவிகளை அதிகரித்தும் கொள்ளும் நோக்கில் தேசிய அரசு அமைக்கப்படுமானால் அது நாட்டுக்கு மற்றுமொரு அழிவாகவே அமையும் என தெரிவித்தார்.
ரணிலின் அறிவிப்பில் உள்நோக்கம். நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் - கம்மன்பிலsamugammedia அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசாங்கம் நிறுவப்படுமானால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையுமென பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை 2022 ஏப்ரல் 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது அணியே முதலில் முன்வைத்தது. எனினும்இ அந்த யோசனையை அவர் ஏற்கவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.தேசிய அரசாங்கத்தை அமைக்கப்பட வேண்டுமானால் அதற்கு முன்னர் பொதுவானதொரு வேலைத்திட்டம் அவசியம். அந்த வேலைத்திட்டத்தை அடிப்படையாக வைத்தே ஆதரிப்பதா அல்லது இல்லையா என்ற முடிவுக்கு எதிரணிகளால் வரக்கூடியதாக இருக்கும்.மாறாக அமைச்சு பதவிகளை அதிகரித்தும் கொள்ளும் நோக்கில் தேசிய அரசு அமைக்கப்படுமானால் அது நாட்டுக்கு மற்றுமொரு அழிவாகவே அமையும் என தெரிவித்தார்.