• May 09 2024

பாடசாலையில் இருந்த கணினி மாயம்..! 3மாணவர்கள் கைது..!samugammedia

Sharmi / Jul 8th 2023, 12:44 pm
image

Advertisement

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கணினி கடந்த 4ம் திகதி கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் அன்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வந்த புலனாய்வில் அப் பகுதியில் உள்ள மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். 

சந்தேக நபர்கள் மூன்று பேரும் முறையே16,16,19, வயது உடையவர்கள் என அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து கணனி கைப்பற்றபட்ட நிலையில் அவர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


பாடசாலையில் இருந்த கணினி மாயம். 3மாணவர்கள் கைது.samugammedia மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கணினி கடந்த 4ம் திகதி கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் அன்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வந்த புலனாய்வில் அப் பகுதியில் உள்ள மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சந்தேக நபர்கள் மூன்று பேரும் முறையே16,16,19, வயது உடையவர்கள் என அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து கணனி கைப்பற்றபட்ட நிலையில் அவர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement