• Sep 20 2024

திருமலையில் இடம்பெற்ற முக்கிய செயலமர்வு...!samugammedia

Sharmi / May 11th 2023, 12:30 pm
image

Advertisement

ஊடகவியலாளர்களுக்கும்,சிவில் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான இணைப்பினை ஏற்படுத்தும் நோக்கினை அடிப்படையாக கொண்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் 10,11 ஆம் திகதிகளில் இடம்பெற்றது

இச் செயலமர்வை திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடங்கிய 20 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இச்செயலமர்வில் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம்.பைரூஸ் நிகழ்த்தியிருந்தார்.

செயலமர்வில் ஊடகவியலாளர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் எவ்வாறு இணைந்து செயற்படுவது,முரண்பாடு தொடர்பில் நடுநிலமையாக எவ்வாறு அறிக்கையிடுவது,பாரம்பரிய நவீன ஊடகங்களின் தற்போதைய போக்கு, ஊடகங்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் எண்ணப்பாடு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.



திருமலையில் இடம்பெற்ற முக்கிய செயலமர்வு.samugammedia ஊடகவியலாளர்களுக்கும்,சிவில் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான இணைப்பினை ஏற்படுத்தும் நோக்கினை அடிப்படையாக கொண்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் 10,11 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுஇச் செயலமர்வை திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை ஏற்பாடு செய்திருந்தது.இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடங்கிய 20 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.இச்செயலமர்வில் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம்.பைரூஸ் நிகழ்த்தியிருந்தார்.செயலமர்வில் ஊடகவியலாளர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் எவ்வாறு இணைந்து செயற்படுவது,முரண்பாடு தொடர்பில் நடுநிலமையாக எவ்வாறு அறிக்கையிடுவது,பாரம்பரிய நவீன ஊடகங்களின் தற்போதைய போக்கு, ஊடகங்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் எண்ணப்பாடு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement