• Sep 21 2024

குழந்தையை பணயக்கைதியாக்கி முதுகில் வெட்டிய நபர்! பொலிஸார் மீதும் தாக்குதல்..! பரபரப்புச் சம்பவம் samugammedia

Chithra / Jul 19th 2023, 12:12 pm
image

Advertisement

மதுரங்குளிய பிரதேசத்தில் தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக வந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தயாரான போது, சந்தேக நபர் குழந்தையை பணயக்கைதியாக பிடித்து கூரிய ஆயுதத்தால் குழந்தையின் முதுகில் வெட்டியுள்ளார்.

பாரிய முயற்சிகளின் பின் காப்பாற்றப்பட்ட குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை பணயக்கைதியாக்கி முதுகில் வெட்டிய நபர் பொலிஸார் மீதும் தாக்குதல். பரபரப்புச் சம்பவம் samugammedia மதுரங்குளிய பிரதேசத்தில் தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக வந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தயாரான போது, சந்தேக நபர் குழந்தையை பணயக்கைதியாக பிடித்து கூரிய ஆயுதத்தால் குழந்தையின் முதுகில் வெட்டியுள்ளார்.பாரிய முயற்சிகளின் பின் காப்பாற்றப்பட்ட குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement