நீர்கொழும்பு - ஏத்துகால கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன நபர் நேற்று (4) ஒரு குழுவினருடன் நீராடச் சென்றதாகவும், அதன்போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மெட்டியகனே - வேவுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவரை தேடும் பணியை நீர்கொழும்பு காவல்துறையினரும் கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.