மகள் ஒருவர் தாயாரை கொலை செய்த பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
35 வயதான மகளிற்கும் அவரது தாயாரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகள் தாயாரை குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கு தூக்க மாத்திரைகளை ஊட்டி தாயாரை கொலை செய்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சூட்கேசை திறந்து பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், அந்த பெண்ணிடம் விசாரணைகளை நடத்திய பின்னர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை வீட்டில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஆயினும் அந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணின் மாமியார் பக்கத்து அறையில் இருந்ததாகவும் அவருக்கு தெரியாத விதமாக தாயாரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.