• May 19 2024

புதிதாக உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் முற்றுமுழுதாக கைவிடப்பட வேண்டும்- பிரகடனம் வெளியிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள்..!samugammedia

Sharmi / May 15th 2023, 3:53 pm
image

Advertisement

புதிதாக உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் முற்றுமுழுதாக கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண முஸ்லிம் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இன்று பிரகடனமொன்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் அது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து கொண்டுவரப்படும் சட்டமென்பது எல்லோருக்கும் தெரியும். அரசாங்கம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் முழுமையாக பிரயோகிப்பது சிறுபான்மை மக்கள் மீதே என கிழக்கின் கேடயம் தலைவரும் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எஸ்.எம். சபீஸ்,

காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஒழுங்கமைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்பூட்டல் கலந்துரையாடல் இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற போது அங்கு வைத்து நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் மனித உரிமையையும் கேள்விக்குட்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ரத்துசெய்யப்படவேண்டும் என்றும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத சட்டங்கள் பெரும்பான்மை மக்களை பாதித்ததை விட பலமடங்கு சக்திவாய்ந்ததாக சிறுபான்மை மக்களே மீதே கடந்த காலங்களில் பாய்ந்துள்ளது. இப்போது அரசின் போக்கை கண்டிப்பவர்கள், அரக்கல செய்பவர்கள், உரிமைகோரி போராடுபவர்களை அடக்கவும் இந்த சட்டத்தை பிரயோகிக்கிறார்கள். இதனால் பெரும்பான்மை மக்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனத்திலுள்ள சிறு கட்சிகளை கூட இந்த சட்டங்கள் தாக்கும் நிலை இருப்பதனால் அவர்களும் இந்த சட்டத்தை பலமாக எதிர்க்கிறார்கள். இப்போதுதான் சிறுபான்மை மக்கள் படும் கஷ்டத்தின் தன்மை அவர்களுக்கு கொஞ்சமாக அறிய முடிந்திருக்கிறது. உலகம் அழியும்வரை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சட்டதிட்டங்களை வரையவேண்டியது அரசியல்வாதிகள், தலைவர்களே. ஆனால் துரதிஷ்டமாக அந்த நிலை இங்கில்லை.

எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். எமது மக்கள் மட்டுமே வாழவேண்டும் என அரசியல் தலைவர்கள் எண்ண கூடாது. மட்டக்களப்பில் முஸ்லிங்களின் காணிகள் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தமிழ் மக்களினால் பிடித்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு முறையான தீர்வை வழங்கவேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை. அரசியல்தலைமைகளே இனவாதத்தை தூண்டுகிறார்கள்.

தேவையில்லாத சட்டமூலங்களை கொண்டுவருகிறார்கள், மக்களை குழப்புகிறார்கள். இவற்றையெல்லாம் கைவிட்டு மக்களை நிம்மதியாக வாழச்செய்ய தலைவர்கள் முன்வரவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்கும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் கைவிட வேண்டும் என கேட்கிறோம் என்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சிவில் சமூகமும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் கடந்த காலங்களில் இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை கடுமையாக தாக்கியுள்ளது என்றும் இதனால் எமது நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த சட்டமூலம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை கோருகின்றோம். முஸ்லிங்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமானவர்கள்.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்கள் அந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக வெறுத்து எதிர்ப்பவர்கள். இந்த சட்டமூலம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு பாரிய விளைவை உண்டுபண்ணுவது என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தை சிதறடிக்கும் சட்டமென்றவகையில் இந்த சட்டமூலத்தை கைவிட நாங்கள் ஒன்றிணைந்து அரசை கோருகின்றோம் என்ற கருத்தை இங்கு பலரும் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், சட்டத்தரணிகளான ஸ்வஸ்திகா அருணலிங்கம், ரணிதா மயூரன் ஆகியோர் இந்த சட்டமூலத்தை பற்றி விளக்கமளித்தனர். சிரேஷ்ட உலமாக்கள், உலமாக்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல், சம்மாந்துறை மஜ்லிஸுர் சூரா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா ஜம்மியத்துல் உலமா, மூதூர் மஜ்லிஸுர் சூரா, கிண்ணியா பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் மட்டக்களப்பு, அம்பாரை, திருமலை மாவட்ட ஜும்மா பள்ளிவாசல்கள், பள்ளிவாசல்கள், பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


புதிதாக உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் முற்றுமுழுதாக கைவிடப்பட வேண்டும்- பிரகடனம் வெளியிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள்.samugammedia புதிதாக உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் முற்றுமுழுதாக கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண முஸ்லிம் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இன்று பிரகடனமொன்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் அது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து கொண்டுவரப்படும் சட்டமென்பது எல்லோருக்கும் தெரியும். அரசாங்கம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் முழுமையாக பிரயோகிப்பது சிறுபான்மை மக்கள் மீதே என கிழக்கின் கேடயம் தலைவரும் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எஸ்.எம். சபீஸ், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஒழுங்கமைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்பூட்டல் கலந்துரையாடல் இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற போது அங்கு வைத்து நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் மனித உரிமையையும் கேள்விக்குட்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ரத்துசெய்யப்படவேண்டும் என்றும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத சட்டங்கள் பெரும்பான்மை மக்களை பாதித்ததை விட பலமடங்கு சக்திவாய்ந்ததாக சிறுபான்மை மக்களே மீதே கடந்த காலங்களில் பாய்ந்துள்ளது. இப்போது அரசின் போக்கை கண்டிப்பவர்கள், அரக்கல செய்பவர்கள், உரிமைகோரி போராடுபவர்களை அடக்கவும் இந்த சட்டத்தை பிரயோகிக்கிறார்கள். இதனால் பெரும்பான்மை மக்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனத்திலுள்ள சிறு கட்சிகளை கூட இந்த சட்டங்கள் தாக்கும் நிலை இருப்பதனால் அவர்களும் இந்த சட்டத்தை பலமாக எதிர்க்கிறார்கள். இப்போதுதான் சிறுபான்மை மக்கள் படும் கஷ்டத்தின் தன்மை அவர்களுக்கு கொஞ்சமாக அறிய முடிந்திருக்கிறது. உலகம் அழியும்வரை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சட்டதிட்டங்களை வரையவேண்டியது அரசியல்வாதிகள், தலைவர்களே. ஆனால் துரதிஷ்டமாக அந்த நிலை இங்கில்லை. எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். எமது மக்கள் மட்டுமே வாழவேண்டும் என அரசியல் தலைவர்கள் எண்ண கூடாது. மட்டக்களப்பில் முஸ்லிங்களின் காணிகள் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தமிழ் மக்களினால் பிடித்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு முறையான தீர்வை வழங்கவேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை. அரசியல்தலைமைகளே இனவாதத்தை தூண்டுகிறார்கள்.தேவையில்லாத சட்டமூலங்களை கொண்டுவருகிறார்கள், மக்களை குழப்புகிறார்கள். இவற்றையெல்லாம் கைவிட்டு மக்களை நிம்மதியாக வாழச்செய்ய தலைவர்கள் முன்வரவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்கும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் கைவிட வேண்டும் என கேட்கிறோம் என்றார். கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சிவில் சமூகமும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் கடந்த காலங்களில் இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை கடுமையாக தாக்கியுள்ளது என்றும் இதனால் எமது நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த சட்டமூலம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை கோருகின்றோம். முஸ்லிங்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமானவர்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்கள் அந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக வெறுத்து எதிர்ப்பவர்கள். இந்த சட்டமூலம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு பாரிய விளைவை உண்டுபண்ணுவது என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தை சிதறடிக்கும் சட்டமென்றவகையில் இந்த சட்டமூலத்தை கைவிட நாங்கள் ஒன்றிணைந்து அரசை கோருகின்றோம் என்ற கருத்தை இங்கு பலரும் தெரிவித்தனர். இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், சட்டத்தரணிகளான ஸ்வஸ்திகா அருணலிங்கம், ரணிதா மயூரன் ஆகியோர் இந்த சட்டமூலத்தை பற்றி விளக்கமளித்தனர். சிரேஷ்ட உலமாக்கள், உலமாக்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல், சம்மாந்துறை மஜ்லிஸுர் சூரா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா ஜம்மியத்துல் உலமா, மூதூர் மஜ்லிஸுர் சூரா, கிண்ணியா பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் மட்டக்களப்பு, அம்பாரை, திருமலை மாவட்ட ஜும்மா பள்ளிவாசல்கள், பள்ளிவாசல்கள், பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement