பிரான்ஸில் பெண் ஒருவர் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து, விபத்தை ஏற்படுத்தியதில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை Lille (Nord) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
86 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அதிவேகமாக பயணித்துள்ளார்.
வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த பெண் சில நிமிடங்களிலேயே பெரும் விபத்தொன்றை ஏற்படுத்தினார். இந்நிலையில் வீதியில் பயணித்த மற்றொரு பெண்ணை இடித்து தள்ளியுள்ளார்.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 66 மற்றும் 60 வயதுடைய தம்பதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் 60 வயதுடைய பெண் சில நொடிகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் பெரும் போராட்டம் நடத்தியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய குறித்த மூதாட்டியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டி பிரான்ஸில் பெண் ஒருவர் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து, விபத்தை ஏற்படுத்தியதில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெள்ளிக்கிழமை மாலை Lille (Nord) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 86 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அதிவேகமாக பயணித்துள்ளார்.வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளார்.தப்பிச் சென்ற குறித்த பெண் சில நிமிடங்களிலேயே பெரும் விபத்தொன்றை ஏற்படுத்தினார். இந்நிலையில் வீதியில் பயணித்த மற்றொரு பெண்ணை இடித்து தள்ளியுள்ளார்.இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 66 மற்றும் 60 வயதுடைய தம்பதிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 60 வயதுடைய பெண் சில நொடிகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மருத்துவ உதவிக்குழுவினர் பெரும் போராட்டம் நடத்தியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. விபத்தை ஏற்படுத்திய குறித்த மூதாட்டியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.