• May 19 2024

இலங்கை மக்களே அவதானம்! 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை! samugammedia

Chithra / Apr 27th 2023, 5:17 pm
image

Advertisement

நாட்டின் 16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் (27.04.2023) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், காலி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கோகலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை மக்களே அவதானம் 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை samugammedia நாட்டின் 16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் (27.04.2023) வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், காலி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கோகலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement