"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை நிறுத்தியாவது ஓரளவாவது இந்த நாட்டை நிமிர்த்தி இருக்கின்றார்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. இப்போதும் மொட்டுக் கட்சி என்ற அடிப்படையில் நாம் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம்.
ஆனால், நிதி அமைச்சராக இருக்கின்ற ஜனாதிபதி அதற்குப் பணமில்லை என்கிறார். எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
தேர்தலை நிறுத்தியாவது ரணில் ஓரளவாவது இந்த நாட்டை நிமிர்த்தி இருக்கின்றார். அதை நாம் ஆதரித்தே ஆகவேண்டும். அதைவிடுத்து விமர்சனங்களை முன்வைப்பதை நாம் தவிர்க்க வேண்டும்." - என்றார்.