தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக்
கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும்
போராட்டத்தின் 4ம் நாள் போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.