சுவிட்சர்லாந்தில் இருந்து சர்வதேச கடற்பகுதியின் ஊடாக இந்தியா நோக்கி பயணித்த, சரக்குக் கப்பலிலே பணிபுரிந்த உக்ரைன் நாட்டினை சேர்ந்த இரண்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 52 வயது மற்றும் 40 வயதுடைய இரண்டு உக்ரைன் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, உயிரிழந்த இருவரினதும் சடலங்களை ஏற்றிய குறித்த சரக்கு கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படையினரும் நேற்று முன்தினம் இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று மாலை நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.