எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம்(13) கைது செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் 17 பேரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) முற்படுத்தினர்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி J.கஜநிதிபாலன் மீனவர்கள் 17 பேரில் இருவர் சிறுவர் என்பதால் இந்திய துணை தூதரக அதிகாரிகளின் மேற்பார்வையில் அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய மீனவர்களை வரும் 27ம் திகதி வரை நீதிமன்ற விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.