ஊவா, மத்திய, தென், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய
மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில்
பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான
ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள்
அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் உச்சம்
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம்
ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின்
அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (05ஆம் திகதி) நண்பகல் 12.13 அளவில் தல்பே,
வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம்
கொடுக்கவுள்ளது.
அதிகம் வெப்பத்தை கருத்திற் கொண்டு, பொது மக்கள் அதிகளவான நீரை பருகுமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்samugammedia ஊவா, மத்திய, தென், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய
மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில்
பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
சாத்தியம் காணப்படுகின்றது.மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான
ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள்
அறிவுறுத்தப்படுகின்றார்கள்.சூரியனின் உச்சம்சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம்
ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின்
அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.அதற்கிணங்க இன்று (05ஆம் திகதி) நண்பகல் 12.13 அளவில் தல்பே,
வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம்
கொடுக்கவுள்ளது.அதிகம் வெப்பத்தை கருத்திற் கொண்டு, பொது மக்கள் அதிகளவான நீரை பருகுமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.