எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் முகங்கொடுக்க தயார் என தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில்(01) நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு மத்திய குழு கூடி சரியாக பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடியதுமான வேட்பாளரை தெரிவு செய்வோம். அதேவேளை, எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.