• May 14 2024

மாணவனை தாக்கி நடக்க முடியாமல் செய்த ஆசிரியர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு SamugamMedia

Chithra / Mar 9th 2023, 2:44 pm
image

Advertisement

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் தரம் 09 இல் கற்கும் ஐ.அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை –  பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக்   ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார். 


சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த  ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிகவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார் என்று, அன்று நடந்த விடயத்தை மாணவன் தெரிவித்தார்.

பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்” என அந்த மாணவன் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார். 

மாணவனை தாக்கி நடக்க முடியாமல் செய்த ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு SamugamMedia ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் தரம் 09 இல் கற்கும் ஐ.அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை –  பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக்   ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார். சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த  ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிகவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார் என்று, அன்று நடந்த விடயத்தை மாணவன் தெரிவித்தார்.பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்” என அந்த மாணவன் குறிப்பிட்டார்.இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement