கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (29) இரண்டு நபர்கள் கையடக்கத் தொலைபேசியைத் திருடிக்கொண்டு சுவரில் ஏறி ஓடிச் சென்ற போது இரண்டு கொத்தனார்கள் அவர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொத்தனார்கள் இருவர் 100 மீற்றர் தூரம் துரத்திச் சென்று இரு திருடர்களையும் பிடித்துள்ளனர். திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கொத்தனார் ஒருவரின் மார்பில் குத்தியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொலைபேசித் திருடர்களைத் துரத்திச் சென்றவருக்கு நேர்ந்த சோகம். இலங்கையில் பயங்கரம் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இன்று (29) இரண்டு நபர்கள் கையடக்கத் தொலைபேசியைத் திருடிக்கொண்டு சுவரில் ஏறி ஓடிச் சென்ற போது இரண்டு கொத்தனார்கள் அவர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொத்தனார்கள் இருவர் 100 மீற்றர் தூரம் துரத்திச் சென்று இரு திருடர்களையும் பிடித்துள்ளனர். திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கொத்தனார் ஒருவரின் மார்பில் குத்தியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.