• Sep 20 2024

பாதசாரி கடவையை அவசரமாக கடந்த நருக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Aug 28th 2023, 3:28 pm
image

Advertisement

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில், வீதியைக் கடந்தவர் லொறி மோதியில் மரணமடைந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் (33) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

வேலைக்குச் செல்வதற்காக காலையில் அவசர, அவசரமாக பாதசாரி கடவையில் கடந்த இவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித்தள்ளியுள்ளது. 

படுகாயமடைந்த நிலையில், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 


பாதசாரி கடவையை அவசரமாக கடந்த நருக்கு ஏற்பட்ட சோகம். samugammedia தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில், வீதியைக் கடந்தவர் லொறி மோதியில் மரணமடைந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம், திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் (33) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.வேலைக்குச் செல்வதற்காக காலையில் அவசர, அவசரமாக பாதசாரி கடவையில் கடந்த இவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித்தள்ளியுள்ளது. படுகாயமடைந்த நிலையில், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement