கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் நேற்று இரவு திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை, ஹோரதுடுவ ஸ்ரீமதி வீதிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மொஹமட் பிர்தௌஸ் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு பாணந்துறை வடக்கு கெசல்வத்த பகுதியில் உள்ள கல்லுபர பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த வீரருக்கு ஏற்பட்ட சோகம். திடீரென உயிரிழப்பு samugammedia கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் நேற்று இரவு திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை, ஹோரதுடுவ ஸ்ரீமதி வீதிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மொஹமட் பிர்தௌஸ் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்று இரவு பாணந்துறை வடக்கு கெசல்வத்த பகுதியில் உள்ள கல்லுபர பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.