கண்டியில் மத்திய வங்கியின் அனுமதியின்றி, நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கண்டிவிவ் கார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மத்திய வங்கியின் அனுமதியின்றி, நடத்திச் செல்லப்பட்ட நிறுவனத்தின் ஊடாக குறித்த நபர் 9 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.