பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் ஜோஸ் பாலினோ கோம்ஸ், வயது மூப்பு காரணமாக தனது 127வது வயதில் காலமானார்.
அடுத்த
வாரம் 128வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், கோம்ஸ்
உயிரிழந்துள்ளார். கோம்ஸின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக
அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோம்ஸின் திருமணச்
சான்றிதழின் படி 1917ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி பிறந்தார். இவர்,
உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர்.
இவர்தான்
உலகின் மிகவும் வயது கூடிய நபராக இருக்கும் நபர் என்ற சாதனையை
படைத்திருந்தார். இப்போது அவர் இறந்த செய்தியை பிரேசில் அரசாங்கம்
உறுதிப்படுத்தியுள்ளது.