• May 19 2024

பாடசாலை மாணவர்களுக்கு இம்முறை பாடப்புத்தகங்கள் இல்லை! வெளியான அறிவிப்பு

Chithra / Jan 21st 2023, 12:38 pm
image

Advertisement

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் இதுவரையில் செலுத்தாததால், புத்தக அச்சடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்கத் தவறியதனால் அச்சு நிறுவனங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் இந்த ஆண்டில் திட்டமிட்டவாறு பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்டபடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை மீண்டும் தொடங்க முன்பணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாடசாலை மாணவர்களுக்கு இம்முறை பாடப்புத்தகங்கள் இல்லை வெளியான அறிவிப்பு பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் இதுவரையில் செலுத்தாததால், புத்தக அச்சடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்கத் தவறியதனால் அச்சு நிறுவனங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் இந்த ஆண்டில் திட்டமிட்டவாறு பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.திட்டமிட்டபடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை மீண்டும் தொடங்க முன்பணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement