பீ.பா உலகக்கிண்ண அரையிறுதி போட்டிக்கான திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இடையே எதிர்வரும் 14ஆம் திகதி போட்டி நடைபெற உள்ளது.
இதனை அடுத்து எதிர்வரும் 15ஆம் திகதி பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் 02 அணிகள் பங்கேற்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.மேலும் அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.