பிரான்ஸில் ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
அவற்றில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் 64 வயதுவரை வேலை பார்க்கவேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது.
தற்போதைய ஓய்வு வயது 62ஆகும். ஓய்வு வயதைக் கூட்டினால் 2030க்குள் ஆண்டுக்கு 18 பில்லியன் டொலர் சேமிப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. ஆனால் அதைத் தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.
வாழ்வதற்காக வேலை செய்யவேண்டுமே தவிர, வேலை செய்வதே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.