தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முதலாம் நாள் நிகழ்வு நாளை நண்பகல் 12 .30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.