• May 17 2024

தமிழர் பகுதியில் சோகம்..! படகு மூழ்கியதில் மீனவர் பலி! மற்றொருவர் மாயம் samugammedia

Chithra / Jul 3rd 2023, 2:16 pm
image

Advertisement

மன்னார் கட்டுக்கரை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் மீனவர் ஒருவரின் சடலம்  இன்று திங்கட்கிழமை (3) காலை   மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர்  பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது. இவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

காணாமல்போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த வள்ளத்தில் நீர் நிரம்பி தாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மற்றைய மீனவரை ஏனைய மீனவர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் பகுதியில் சோகம். படகு மூழ்கியதில் மீனவர் பலி மற்றொருவர் மாயம் samugammedia மன்னார் கட்டுக்கரை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் மீனவர் ஒருவரின் சடலம்  இன்று திங்கட்கிழமை (3) காலை   மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட மீனவர்  பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது. இவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.காணாமல்போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என இனங்காணப்பட்டுள்ளது.குறித்த வள்ளத்தில் நீர் நிரம்பி தாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மற்றைய மீனவரை ஏனைய மீனவர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement