• May 17 2024

திருமலையில் சோகம்...! மரத்துடன் மோதிய முச்சக்கரவண்டி...! குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Sep 3rd 2023, 1:23 pm
image

Advertisement

திருகோணமலை வெருகல் பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது-

வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் சோகம். மரத்துடன் மோதிய முச்சக்கரவண்டி. குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia திருகோணமலை வெருகல் பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது-வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement