மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகளை அடுத்து உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தாம் பணியாற்றிய இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவுடன் உத்தியோகபூர்வ நோக்கத்திற்காக மஹவெல பகுதிக்கு சென்ற போது அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கல்கிரியாகம - உஸ்ஸான பாலத்திற்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் 37 வயதுடைய உஸ்ஸான, தேவஹுய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
உடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற சோகச் சம்பவங்கள் - பறிபோன உயிர்கள். samugammedia மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை மற்றும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகளை அடுத்து உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் தாம் பணியாற்றிய இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவுடன் உத்தியோகபூர்வ நோக்கத்திற்காக மஹவெல பகுதிக்கு சென்ற போது அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கல்கிரியாகம - உஸ்ஸான பாலத்திற்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர் 37 வயதுடைய உஸ்ஸான, தேவஹுய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.உடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.