திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அதிவேக புகையிரதம் நேற்றிரவு (08) கல் ஓயா மற்றும் ஹபரணை நிலையங்களுக்கு இடையில் மூன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளான காரணமாக தடம் புரண்டுள்ளது.
இதனால், கிழக்குப் பாதையில் இயக்கப்படும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் திருகோணமலை ரயில் தடம் பிரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.