நாகர்கோவிலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக
நாகர்கோவில் மகாவித்தியாலயம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை
10:30 மணியளவில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள்
முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னணியின் மகளிர்
அணி தலைவி வாசுகி சுதாகரன் உட்பட்ட முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.