திருகோணமலை - சம்பூர், ஆலங்குளம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் சிரமதான நிகழ்வை சம்பூர் - மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு எற்பாடு செய்திருந்தது.
இவ் சிரமதான நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.