• Apr 20 2024

பெருந்தோட்ட மக்களிடம் குறைகேட்டறிந்த அமெரிக்க தூதுவர்..! samugammedia

Chithra / Jun 5th 2023, 5:35 pm
image

Advertisement

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று பெருந்தோட்டப் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயம் குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


தமது விஜயம் தொடர்பில் தூதுவர் குறிப்பிடுகையில், மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்தேன். அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளனர்.

அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தூதுவர் ஜூலி மேலும் தெரிவித்துள்ளார்.


பெருந்தோட்ட மக்களிடம் குறைகேட்டறிந்த அமெரிக்க தூதுவர். samugammedia இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று பெருந்தோட்டப் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.இந்த விஜயம் குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.தமது விஜயம் தொடர்பில் தூதுவர் குறிப்பிடுகையில், மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்தேன். அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளனர்.அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தூதுவர் ஜூலி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement