• May 20 2024

வீதியை விட்டு வெளியே பாய்ந்த வான் - ஒருவர் படுகாயம் samugammedia

Chithra / Jun 8th 2023, 1:07 pm
image

Advertisement

நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து நுவரெலியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த போதே குறித்த வான் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது குறித்த வானில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவர் மாத்திரம் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வான் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியை விட்டு வெளியே பாய்ந்த வான் - ஒருவர் படுகாயம் samugammedia நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து நுவரெலியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த போதே குறித்த வான் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து இடம்பெற்ற போது குறித்த வானில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவர் மாத்திரம் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வான் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.இந்த விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement