இராசையா குடும்பத்தின் நிதி அனுசரணையில், வன்னி கோப் நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடானது சம்பிரதாயபூர்வமாக பயனாளிகளிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் பொருண்மியம் குன்றிய, ஆறு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு இவ்வாறு வீடு வழங்கி வைக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி, பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் நாடா வெட்டி வீடு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னிகோப் நிறுவனத்தினர், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.