வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் நேற்று முன்தினம்(18) குடும்பஸ்தர் ஓருவர் மீது இரு நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் இன்று(20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன்(தீபன்) என்பவரே மேற்படி உயிரிழந்தவர் ஆவார்.
இவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரில் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 32வயதுடைய பிரதான சந்தேக நபர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலதிக விசாரனைகளை வவுனியா தலமை பொலிஸ்நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மதுபான சாலையில் தாக்குதல் - குடும்பஸ்தர் உயிரிழப்பு samugammedia வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் நேற்று முன்தினம்(18) குடும்பஸ்தர் ஓருவர் மீது இரு நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் இன்று(20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வவுனியா மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன்(தீபன்) என்பவரே மேற்படி உயிரிழந்தவர் ஆவார்.இவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரில் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 32வயதுடைய பிரதான சந்தேக நபர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.மேலதிக விசாரனைகளை வவுனியா தலமை பொலிஸ்நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.