சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல சிரமதான பணிக்காகச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலை மாவட்ட முக்கியஷ்தர்கள்களின் வாகனம் இன்று சனிக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிய் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் குகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறி பிரசாத் ஆகியோர் பயணித்த வாகனமானது வடக்கைச் சேர்ந்தது என்பதாலும், சிரமதான பணிக்கு சென்றமையாலும் இவ்வாறு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.