பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே இன்றையதினம் விமல் வீரவம்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.