ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று காலை ஜய ஸ்ரீ மகா போதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணி அமைப்பது சவாலானது அல்ல.
எங்கள் கட்சியின் உறுப்பினர்கள், எல்லா இடங்களிலும் கூட்டணிகளிலும் இருப்பது நல்லது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி கண்டிப்பாக அறிவிக்கும். கட்சியின் தீவிர உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் காலம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமலுக்கும் இன்னும் காலம் தேவை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நேற்று காலை ஜய ஸ்ரீ மகா போதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணி அமைப்பது சவாலானது அல்ல.எங்கள் கட்சியின் உறுப்பினர்கள், எல்லா இடங்களிலும் கூட்டணிகளிலும் இருப்பது நல்லது.ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி கண்டிப்பாக அறிவிக்கும். கட்சியின் தீவிர உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.மேலும், ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் காலம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.