• May 04 2024

துபாய் புறப்பட்ட இலங்கை விமானத்துக்கு ஏற்பட்ட கதி..! samugammedia

Chithra / Apr 23rd 2023, 7:09 am
image

Advertisement

டுபாய் நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் ஒன்று மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான பயணத்தின் பின்னர் நேற்று (21) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 புறப்பட்டது.ஏ.- இந்த ஏர்பஸ் 330 விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 01 மணி 06 நிமிடங்களின் பின்னர், விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக இந்த விமானம் மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையின் பொறியியலாளர்கள் குழுவொன்று தேவையான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இந்த விமானத்தை சரிசெய்து வருகின்றது. 

இந்த விமானத்திற்குப் பதிலாக ஏ-330 எயார்பஸ் போன்ற இலங்கை விமானம் இன்று (22) காலை 11.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இந்தப் பயணிகளை அனுப்புவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

துபாய் புறப்பட்ட இலங்கை விமானத்துக்கு ஏற்பட்ட கதி. samugammedia டுபாய் நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் ஒன்று மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான பயணத்தின் பின்னர் நேற்று (21) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 புறப்பட்டது.ஏ.- இந்த ஏர்பஸ் 330 விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 01 மணி 06 நிமிடங்களின் பின்னர், விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக இந்த விமானம் மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது இலங்கையின் பொறியியலாளர்கள் குழுவொன்று தேவையான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இந்த விமானத்தை சரிசெய்து வருகின்றது. இந்த விமானத்திற்குப் பதிலாக ஏ-330 எயார்பஸ் போன்ற இலங்கை விமானம் இன்று (22) காலை 11.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இந்தப் பயணிகளை அனுப்புவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement