சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பகுதிக்கான காட்சிகளின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்து விட்டார். அனேகமாக இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது