சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி
தெரிவித்திருந்தாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
தனது கட்சியில் யார் கோபமாக இருந்தாலும், அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு தாராளமாக ஆதரவளிப்போவதாகவும் அதனை எவரும் தடுக்கமுடியாது என்றும் பௌசி குறிப்பிட்டுள்ளார்.