தம்புள்ளை – குருநாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இன்று மதியம் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பயங்கர விபத்தில் மல்சிறிபுர – நீரமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான ரத்நாயக்க என்ற மகனும், 62 வயதுடைய கமலாவதி என்ற தாயுமே உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்த நிலையில் கொழும்பில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த லங்கம பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, லங்கம பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்
ஆபத்தான நிலையில் மனைவி - பார்க்கச் சென்ற மகனும் தாயும் பயங்கர விபத்தில் பலி தம்புள்ளை – குருநாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இன்று மதியம் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த பயங்கர விபத்தில் மல்சிறிபுர – நீரமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான ரத்நாயக்க என்ற மகனும், 62 வயதுடைய கமலாவதி என்ற தாயுமே உயிரிழந்துள்ளனர்.குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்த நிலையில் கொழும்பில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த லங்கம பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதையடுத்து, லங்கம பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்