• May 19 2024

இரண்டாம் முறை உடலுறவை தடுத்த மனைவி! கழுத்தைநெரித்து கொலை!

crownson / Dec 10th 2022, 7:38 am
image

Advertisement

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தலைமுடி வெட்டப்பட்ட நிலையில், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் முகமது அன்வரின் மனைவி ருக்‌ஷர் என்பது தெரிய வந்துள்ளது.

மனைவியை காணவில்லை என அன்வர் போலீசிலில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார் அன்வரிடம் தங்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீஸாரிடம் அன்வர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  அன்வருக்கும், ருஷ்கருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு ஆகிறது.

இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இருவரும் உறக்க சென்றுவிட்டனர். சிறிதுநேரம் கழித்து கண் விழித்த அன்வர் மனைவியை மீண்டும் பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு ருக்‌ஷர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக நள்ளிரவில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவியை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

கொலையை மறைந்து மாயமானதாக நாடகமாட முடிவு செய்த அன்வர் தனது மனைவியின் தலைமுடியை வெட்டியுள்ளார்.

அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றில் அதிகாலை வேளையில் தனது ஊரில் இருந்து 50 கி.மீ தொலைவில் வீசிவிட்டு வந்துள்ளார்.

இதற்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.இதனையடுத்து உறவினர்களிடம் மனைவியை காணவில்லை எனக் கூறி தேடுதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

மேலும் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க காவல் நிலையத்திலும் மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்தது தெரியவந்துள்ளது.

மேலும் போலீஸார் விசாரணையில் இறங்கிய போது அடையாளம் தெரியாத பெண் சடலம் குறித்து தகவல் தெரியவர அங்கு சென்று விசாரித்துள்ளனர்.

இதன்பின்னரே இறந்தது ருக்‌ஷர் என்பது தெரியவந்துள்ளது. போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அன்வர் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சகோதர் டேனிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

இரண்டாம் முறை உடலுறவை தடுத்த மனைவி கழுத்தைநெரித்து கொலை உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தலைமுடி வெட்டப்பட்ட நிலையில், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் முகமது அன்வரின் மனைவி ருக்‌ஷர் என்பது தெரிய வந்துள்ளது. மனைவியை காணவில்லை என அன்வர் போலீசிலில் புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார் அன்வரிடம் தங்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தனர். போலீஸாரிடம் அன்வர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  அன்வருக்கும், ருஷ்கருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த திங்கட்கிழமை அன்று இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இருவரும் உறக்க சென்றுவிட்டனர். சிறிதுநேரம் கழித்து கண் விழித்த அன்வர் மனைவியை மீண்டும் பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ருக்‌ஷர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக நள்ளிரவில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவியை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைந்து மாயமானதாக நாடகமாட முடிவு செய்த அன்வர் தனது மனைவியின் தலைமுடியை வெட்டியுள்ளார்.அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றில் அதிகாலை வேளையில் தனது ஊரில் இருந்து 50 கி.மீ தொலைவில் வீசிவிட்டு வந்துள்ளார். இதற்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.இதனையடுத்து உறவினர்களிடம் மனைவியை காணவில்லை எனக் கூறி தேடுதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மேலும் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க காவல் நிலையத்திலும் மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்தது தெரியவந்துள்ளது. மேலும் போலீஸார் விசாரணையில் இறங்கிய போது அடையாளம் தெரியாத பெண் சடலம் குறித்து தகவல் தெரியவர அங்கு சென்று விசாரித்துள்ளனர். இதன்பின்னரே இறந்தது ருக்‌ஷர் என்பது தெரியவந்துள்ளது. போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அன்வர் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சகோதர் டேனிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

Advertisement

Advertisement

Advertisement