• May 19 2024

கொழும்பிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் பெண் மீது கொடூர தாக்குதல்..! 5 ஊழியர்கள் கைது samugammedia

Chithra / Sep 24th 2023, 10:35 am
image

Advertisement

கொழும்பு பொரளை பகுதியிலுள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. 

எனினும், சம்பவம் பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

விற்பனை நிலையத்திலிருந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்தே, குறித்த வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும், சமூக ஊடகங்களில் காணொளி வைரலாகும் வரை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் காவல் நிலையங்களில் பதிவாகவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் பெண் மீது கொடூர தாக்குதல். 5 ஊழியர்கள் கைது samugammedia கொழும்பு பொரளை பகுதியிலுள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல்பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சம்பவம் பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.விற்பனை நிலையத்திலிருந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்தே, குறித்த வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், சமூக ஊடகங்களில் காணொளி வைரலாகும் வரை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் காவல் நிலையங்களில் பதிவாகவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement